Dharmasthala Temple Conspiracy Deepens! பிரகாஷ் ராஜை அலறவிட்ட கன்னட மீடியாக்கள்! தமிழ்நாடு, கேரளா பணப் பரிமாற்றப் பின்னணி? பாதியிலேயே பிரஸ் மீட்டை முடித்துவிட்டு ஓட்டம்!

கர்நாடக மாநிலத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான தர்மஸ்தலா (Dharmasthala) மஞ்சுநாதர் கோவில் மற்றும் அதன் தர்மாதிகாரி வீரேந்திர ஹெக்டே (Veerendra Heggade) ஆகியோருக்கு எதிராக ஒரு மிகப்பெரிய சதித் திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், பிரபல பன்மொழி நடிகர் பிரகாஷ் ராஜின் (Prakash Raj) பெயர் அடிபடுவது தற்பொழுது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சதித் திட்டத்தின் பின்னணியில், தமிழ்நாட்டிலிருந்தும் (Tamil Nadu) கேரளாவிலிருந்தும் (Kerala) கோடிக்கணக்கான ரூபாய் நிதியுதவி கைமாறியதாக வெளியாகி வரும் அதிர்ச்சித் தகவல்கள், இந்த விவகாரத்தைத் தமிழக மக்கள் மத்தியிலும் உற்றுநோக்க வைத்துள்ளது. இந்தச் சதியின் முக்கியப் புள்ளியாகச் சித்தரிக்கப்படும் ‘சின்னையா’ (Chinnayya) என்பவருக்குப் பின்னால், ஒரு மிகப்பெரிய இந்து எதிர்ப்பு நெட்வொர்க் இயங்கி வருவதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இது தொடர்பாகத் தர்மபுரி, சென்னை மற்றும் கேரள எல்லைப் பகுதிகளில் உள்ள சில முக்கியப் புள்ளிகளிடம் கர்நாடக அரசால் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) விசாரணை நடத்தி வருகிறது. இந்தச் சூழலில், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் பிரகாஷ் ராஜுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறி போலீஸ் குற்றப்பத்திரிகையில் (Charge Sheets) சில விபரங்கள் கசிந்துள்ளன. குறிப்பாக, வழக்கில் சிக்கிய சின்னையாவிடம் பிரகாஷ் ராஜ், “நான் உன்னை அப்புறமாக வந்து நேரில் சந்திக்கிறேன்” என்று கூறியதாகத் தகவல்கள் வெளியாகின.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  September Quota Alert for Tirupati Devotees! ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தேதிகள் வெளியீடு! கல்யாண உற்சவம் முதல் ரூ.300 தரிசனம் வரை! எப்போது, எந்த நேரத்தில் புக் செய்யணும்?! TTD முக்கிய அறிவிப்பு!

பிரஸ் மீட்டில் அலறிய பிரகாஷ் ராஜ் – நெட்டிசன்கள் கேள்வி: இந்த விவகாரம் குறித்துப் பெங்களூரு பிரஸ் கிளப்பில் பிரகாஷ் ராஜ் அவசரமாக ஒரு செய்தியாளர் சந்திப்பைக் கூட்டினார். வழக்கமாகச் சமூக வலைத்தளங்களில் எதற்கெடுத்தாலும் “ஜஸ்ட் ஆஸ்கிங்” (#JustAsking) என்று ட்வீட் போட்டுப் பிறரைக் கேள்வி கேட்கும் பிரகாஷ் ராஜ், இந்த முறை ஒரு ட்வீட் அல்லது வீடியோ மூலமாகப் பதிலளிக்காமல் பிரஸ் மீட் கூட்டியதே சந்தேகத்தை வலுப்பதாகக் கன்னட ஊடகங்கள் சாடினார்கள். செய்தியாளர்கள் தர்மஸ்தலா கோவில் சதி வழக்கு, தமிழ்நாடு-கேரளா பணப் பரிமாற்றம் மற்றும் ‘மாஸ்க் மேன்’ (Mask Man) என்று அழைக்கப்படும் சின்னையாவுடனான தொடர்பு குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியபோது பிரகாஷ் ராஜ் கடுமையான எரிச்சலடைந்தார்.

“நான் இங்கு விளக்கம் அளிக்கத்தான் வந்தேனே தவிர, ஊடகங்களின் விசாரணைக்கு முகம் கொடுக்க வரவில்லை” என்று ஆவேசப்பட்டார். இருப்பினும், குற்றம் சாட்டப்பட்ட சின்னையா தனக்கு போன் செய்ததை ஒப்புக்கொண்ட அவர், எஸ்ஐடி (SIT) அதிகாரி பிரணாப் மொகந்தியிடம் (Pranab Mohanty) தான் பேசியதாகவும், சின்னையாவை உண்மையைச் சொல்லி போலீசுக்கு ஒத்துழைக்குமாறு தான் அறிவுறுத்தியதாகவும் மழுப்பலாகப் பதிலளித்தார். ஆனால், ‘வழக்குப்பதிவு செய்யப்பட்ட பிறகும், எஸ்ஐடி அமைக்கப்பட்ட பிறகும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஏன் பிரகாஷ் ராஜைத் தொடர்பு கொள்ள வேண்டும்? அவர் ஏன் எஸ்ஐடி அதிகாரியிடம் பேச வேண்டும்?’ என்ற கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல், பிரகாஷ் ராஜ் பிரஸ் மீட்டைப் பாதியிலேயே முடித்துவிட்டுச் சட்டென்று அங்கிருந்து கிளம்பினார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  இந்தியாவில் மீண்டும் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்தது டெலிகிராம்! மத்திய அரசு விதித்த அதிரடித் தடை அதிரடியாக நீக்கம்!: நீட் மறுதேர்வு வினாத்தாள் கசிவைத் தடுக்க வைக்கப்பட்ட செக்! முழு விபரம் உள்ளே!

பின்னணியில் அரசியல் மௌனம்? வழக்கமாக இந்து மதச் சடங்குகள் மற்றும் ஆன்மீகம் சார்ந்த விவகாரங்களைத் தொடர்ச்சியாக விமர்சித்து வரும் பிரகாஷ் ராஜ், முன்னதாகத் தனது தாயாரின் இறுதிச்சடங்கைக் கிறிஸ்தவ முறைப்படி நடத்தியபோது எழுந்த விமர்சனங்களுக்குத் தனது விமர்சகர்களை “வெறுப்பைப் பரப்பும் அரக்கர்கள்” என்று கடுமையாகச் சாடியிருந்தார். தற்பொழுது தர்மஸ்தலா கோவில் விவகாரத்தில் தமிழ்நாடு மற்றும் கேரளத் தொடர்புகள் தீவிரமாகப் பேசப்பட்டு வரும் நிலையில், கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா (Siddaramaiah) ஆட்சியில் இந்த எஸ்ஐடி விசாரணை மந்தமாக நடப்பதாகக் விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனினும், தீவிர ஆன்மீகப் பற்றாளரான துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் (D.K. Shivakumar) இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து, தமிழ்நாட்டுப் பணப் பரிமாற்றப் பின்னணி மற்றும் பிரகாஷ் ராஜின் உண்மையான பின்னணியை வெளிக்கொண்டு வருவாரா என்று ஒட்டுமொத்த தென்னிந்தியப் பாதுகாப்பு வட்டாரங்களும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றன.