மரத் தகராறு
“25 வருடப் பகை… தந்தை, பக்கத்து வீட்டுக்காரர் கொடூரக் கொலை!” – தெலங்கானாவில் வீச்சருவாள் வெறிச்செயல்!
எல்லைக்கோடு வேப்ப மரத்திற்காக 25 ஆண்டுகளாக நீடித்து வந்த பகை, இறுதியில் இரண்டு உயிர்களைப் பலிவாங்கிய கொடூரத்தில் முடிந்துள்ளது. பக்கத்து வீட்டுக்காரரை வெட்டிக் கொன்ற மகன், வழக்கைத் திசைதிருப்பத் தனது சொந்தத் தந்தையையே கோடரியால் வெட்டிக் கொன்ற சம்பவம் தெலங்கானா மாநிலத்தை உலுக்கியுள்ளது.
