தமிழக அரசியல் மற்றும் கோலிவுட் வட்டாரங்களில் கடந்த சில மணி நேரங்களாகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கு விசாரணையில் தற்பொழுது மிக முக்கியமான புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று காலை விசாரணைக்கு வந்த இந்த வழக்கை, வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இன்று இந்த வழக்கு குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுஜாதா முன்னிலையில் விசாரணைப் பட்டியலுக்கு வந்தது. கடந்த சில வாரங்களாகவே விஜய் மற்றும் சங்கீதா இருவருக்குள்ளும் திரைமறைவில் சமரச பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகப் பரவலான வதந்திகள் றெக்கை கட்டிப் பறந்த சூழலில், இன்றைய நீதிமன்ற நகர்வுகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தன. ஆனால், இன்றைய விசாரணையின் போது இரு தரப்பிலும் வக்காலத்து (Vakalat) இன்னும் முழுமையாகத் தாக்கல் செய்யப்படாததை நீதிபதி சுட்டிக்காட்டினார்.
இதனால் கடும் அதிருப்தியடைந்த நீதிபதி சுஜாதா, வக்காலத்து தாக்கல் செய்யப்படாதது குறித்துச் சங்கீதா தரப்பு வழக்கறிஞரிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். மேலும், மனுதாரரான சங்கீதா மற்றும் எதிர் மனுதாரரான முதல்வர் விஜய் ஆகிய இருவருடைய அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் (E-mail) முகவரிகளையும் நீதிமன்றத்தில் உடனடியாகச் சமர்ப்பிக்க வேண்டும் என்று வழக்கறிஞர்களுக்குத் திட்டவட்டமாக உத்தரவிட்டார்.
இதற்கிடையே, முதல்வர் விஜய்யின் பாதுகாப்பு மற்றும் பொதுப் பணிச் சுமைகளைக் கருத்தில் கொண்டு, இந்த வழக்கை ஆன்லைன் மூலமாக அதாவது வீடியோ கான்பரன்சிங் (Video Conferencing) முறையில் விசாரிக்க வேண்டும் என்று விஜய் தரப்பு சட்டக் குழுவினர் முன்வைத்த கோரிக்கை தற்பொழுது அதிரடியாக நிராகரிக்கப்பட்டுள்ளது. விவாகரத்து வழக்குகளில் காணொலி விசாரணை சாத்தியமில்லை என்று குறிப்பிட்ட நீதிமன்றம், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது. இதனால், அடுத்த விசாரணையின் போது முதல்வர் விஜய் நேரில் ஆஜராக வேண்டிய சூழல் உருவாகுமா என்ற விவாதம் மீண்டும் கிளம்பியுள்ளது.





