Pakistan’s Conspiracy in the Bay of Bengal! 55 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் நுழையும் நீர்மூழ்கிக் கப்பல்! சீன கூட்டுடன் இந்தியாவுக்குப் புதிய பாதுகாப்பு சவால்!

1971-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய – பாகிஸ்தான் போருக்குப் பிறகு வங்கக்கடலில் (Bay of Bengal) தனது ஆதிக்கத்தை முழுமையாக இழந்த பாகிஸ்தான், சுமார் 55 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அங்கே கால்பதிக்கத் தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது. சீனாவிடமிருந்து வாங்கப்பட்ட அதிநவீன ‘ஹாங்கூர்’ (Hangor-class) வகை நீர்மூழ்கிக் கப்பல் கராச்சி துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தங்களது அடுத்த இலக்கு வங்கக்கடல் தான் என்று பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் வெளிப்படையாகவே அறிவித்துள்ளது இந்திய பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘ஹாங்கூர்’ என்ற பெயர் இந்திய கடற்படை வரலாற்றில் ஒரு கசப்பான நினைவைக் கொண்டது. 1971 போரின் போது இதே பெயரைக் கொண்ட பாகிஸ்தான் நீர்மூழ்கிக் கப்பலால் தான் இந்தியாவின் ‘ஐஎன்எஸ் குக்ரி’ (INS Khukri) கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. அந்த வரலாற்றுப் பெருமையை நினைவுபடுத்தும் வகையில், இப்போது சீனா கொடுத்துள்ள 8 புதிய நீர்மூழ்கிக் கப்பல்களுக்கும் அதே பெயரையே பாகிஸ்தான் சூட்டியுள்ளது.

ஏஐபி (AIP – Air-Independent Propulsion) எனப்படும் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள், மற்ற சாதாரண நீர்மூழ்கிகளைப் போல அடிக்கடி நீரின் மேற்பரப்பிற்கு வராமல், நீண்ட காலம் நீருக்கடியிலேயே மறைந்திருந்து தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்டவை. இந்தியாவின் கிழக்கு கடற்படை தலைமையகம், அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் முக்கியமான வர்த்தகப் பாதைகள் அமைந்துள்ள வங்கக்கடல் பிராந்தியத்தில் பாகிஸ்தான் தனது நீர்மூழ்கிக் கப்பல்களை உளவ விடுவது இந்தியாவிற்கு ஒரு புதிய பாதுகாப்பு சவாலாகும். இதுவரை அரபிக் கடலோடு நின்று கொண்டிருந்த பாகிஸ்தான் கடற்படை, இப்போது இந்தியாவின் கொல்லைப்புறமான வங்கக்கடலுக்குள் நுழையத் திட்டமிடுவது ஒரு மிகப்பெரிய ராஜதந்திர மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  ஆப்பிளுக்கு டிஸ்ப்ளே தயாரிக்கும் சாம்சங்.. செப்டம்பரில் வெளியாகும் முதல் போல்டபிள் ஐபோன்! அதிரடி ஒப்பந்தம் அம்பலம்!: டெக் உலகையே உலுக்கிய மெகா கூட்டணி! முதல்கட்டமாக 30 லட்சம் OLED பேனல்கள் ரெடி!

இதற்குப் பின்னால் அண்டை நாடான வங்கதேசத்தின் (Bangladesh) அரசியல் மாற்றமும் ஒரு முக்கிய காரணமாகும். வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்த பிறகு, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசில் பாகிஸ்தானுக்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான ராணுவ மற்றும் வர்த்தக உறவுகள் வேறொரு உயரத்தைத் தொட்டுள்ளன. சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு கராச்சி மற்றும் சட்டகிராம் இடையே நேரடி கடல் வழிப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த புதிய ராஜதந்திர நெருக்கம் பாகிஸ்தான் நீர்மூழ்கிக் கப்பல்கள் வங்கக்கடலில் நிரந்தரமாகத் தளம் அமைக்கவோ அல்லது அடிக்கடி ரோந்துப் பணிகளில் ஈடுபடவோ வழிவகை செய்யக்கூடும் என அஞ்சப்படுகிறது. இருப்பினும், இந்திய கடற்படை இன்று 1971-ல் இருந்ததை விட பல மடங்கு வலிமை பெற்றுள்ளது. அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள், இரண்டு போர் விமானம் தாங்கி கப்பல்கள் மற்றும் நீண்ட தூர கண்காணிப்பு விமானங்களுடன் இந்தியா மிகவும் வலுவான நிலையில் உள்ளதால், பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைகள் இந்தியாவிற்கு ஒரு சிறிய எரிச்சலைத் தரக்கூடுமே தவிர, வங்கக்கடலில் இந்தியாவின் ஆதிக்கத்தை அசைக்க முடியாது என்பதே உண்மை.