தமிழ் திரையுலகில் முன்னணி நடன இயக்குனராகவும், நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வரும் ராகவா லாரன்ஸ் (Raghava Lawrence), தனது அறக்கட்டளை மூலம் எக்கச்சக்கமான ஏழை எளிய குழந்தைகளுக்கு உதவி செய்து மக்கள் மத்தியில் பெரும் நன்மதிப்பைப் பெற்றவர். இதன் காரணமாக, அவர் எப்போது அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், அவர் விரைவில் தேர்தல் களத்தில் குதிக்க உள்ளதாகப் பரவி வரும் ஒரு ஹாட் செய்தி தற்பொழுது ஒட்டுமொத்த ஊடகங்களிலும் காட்டுத்தீயாய் பரவி மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.
திருச்சி கிழக்கு (Trichy East) தொகுதி சட்டமன்றத் தேர்தலில் ராகவா லாரன்ஸ் போட்டியிடப் போவதாகப் பல்வேறு ஊடகத் தளங்களில் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்தன.
இந்த தேர்தல்Speculation மிகப்பெரிய அளவில் உருவெடுத்து, ஒட்டுமொத்த கோலிவுட் மற்றும் அரசியல் வட்டாரத்தையே உலுக்கிய நிலையில், இதற்குப் பதில் அளிக்க வேண்டிய கட்டாயம் தனக்கு ஏற்பட்டுள்ளதாகக் கூறி ராகவா லாரன்ஸ் தற்பொழுது தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தள பக்கத்தில் ஒரு பிரத்யேக அறிக்கையைப் பகிர்ந்துள்ளார்.
அதில், “வணக்கம், நான் திருச்சி கிழக்கு தேர்தலில் போட்டியிடுவதாகப் பல்வேறு ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இது தொடர்பாகத் தெளிவுபடுத்துமாறு எனது ஊடக நண்பர்கள் பலரும் தொடர்ந்து தொலைபேசி வாயிலாக என்னைத் தொடர்பு கொண்டும், நேரில் சந்திக்கக் கோரியும் கேட்டு வருகின்றனர். இந்த யூகங்கள் தற்பொழுது நான் கட்டாயம் பேச வேண்டிய ஒரு நிலையை எட்டியுள்ளதால், இந்த சிறிய குறிப்பைப் பகிர்ந்து கொள்கிறேன்” என்று லாரன்ஸ் மிகவும் நிதானமாகக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய தனது வேலைகள் குறித்துப் பேசிய அவர், லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் தான் நடித்து வரும் பிரம்மாண்ட ஆக்ஷன் திரைப்படமான “பென்ஸ்” (Benz Movie Shooting) படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் தற்போதைய ஷெட்யூல் வரும் ஜூன் 10 ஆம் தேதியுடன் முழுமையாக நிறைவடைகிறது.
இதனைத் தொடர்ந்து, “எனது தாயாரின் ஆசிவாதத்துடன், எனது வாழ்க்கையின் மிக முக்கியமான ஒரு முடிவு (An Important Decision) வரும் ஜூன் 11, வியாழக்கிழமை காலை 9:30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்” என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். மேலும், அந்த பதிவின் இறுதியில் “மாற்றம்” மற்றும் “சேவையே கடவுள்” (#Mattram #Serviceisgod) ஆகிய ஹேஷ்டேகுகளையும் அவர் பகிர்ந்துள்ளார். லாரன்ஸ் குறிப்பிட்டிருக்கும் இந்த “மாற்றம்” என்ற வார்த்தை அவர் புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கப் போகிறாரா அல்லது ஏதேனும் மாபெரும் மக்கள் சேவை திட்டத்தை அறிவிக்கப் போகிறாரா என்ற பலத்த கேள்வியையும், எதிர்பார்ப்பையும் தற்பொழுது தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ளது.





