சீனாவின் ஜெஜியாங் பல்கலைக்கழகத்தில் (Zhejiang University) ஹியூமனாய்டு ரோபோ ஒன்று, அங்கு நின்றிருந்த மாணவியைத் திடீரென ஓடிச் சென்று கட்டியணைத்த வீடியோ இணையத்தில் வைரலானது. “நிஜ உலக எந்திரன் சிட்டி உருவாகிவிட்டதா?” என நெட்டிசன்கள் வியந்து போயினர். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘எந்திரன்’ படத்தில், சிட்டி ரோபோ நாயகி சனா மீது காதல் கொள்வது போன்றே இந்தச் சம்பவமும் அமைந்திருந்தது.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அந்த ரோபோவை உருவாக்கிய நிறுவனம் இதன் பின்னணியில் உள்ள தொழில்நுட்பக் காரணத்தை விளக்கியுள்ளது.
During a performance a university sports event in Shaanxi, a dancing robot suddenly turned and hugged a female dancer beside it before staff quickly stepped in and pulled it away. The clip sparked jokes online, with some asking: “Has it developed self-awareness already?!” pic.twitter.com/E1NsYZ4EGg
— Shanghai Daily (@shanghaidaily) April 24, 2026
ட்ரோன்களால் ஏற்பட்ட சிக்னல் பாதிப்பு: அந்தப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தில் ஒரே நேரத்தில் 50-க்கும் மேற்பட்ட அதிநவீன ட்ரோன்கள் (Drones) மற்றும் ஏஐ கருவிகள் சோதிக்கப்பட்டன. இதனால் ஏற்பட்ட மிகப்பெரிய ‘சிக்னல் குறுக்கீடு’ (Signal Interruption), ரோபோவின் மையக் கட்டுப்பாட்டு அமைப்பில் ஊடுருவி அதன் செயல்பாட்டை நிலைகுலையச் செய்துள்ளது.
எந்திரன் பட பாணியில் ஒரு ‘ட்விஸ்ட்’: ‘எந்திரன்’ படத்தில் சிட்டி ரோபோ உணர்ச்சிகளைப் பெற்றது போல, இங்கும் ட்ரோன்களின் அலைவரிசை ரோபோவின் ‘எம்பதி’ (Empathy Response) சென்சார்களைத் தூண்டியுள்ளது. இதனால், அந்த ரோபோ மாணவியைத் தவறாகப் புரிந்துகொண்டு, காதலோடு அணைத்துள்ளது. இது ஒரு ‘தற்செயலான தொழில்நுட்பத் தவறு’ (Technical Glitch) என நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
வல்லுநர்கள் எச்சரிக்கை: ஒரு சிறிய சிக்னல் குறுக்கீடு இயந்திரங்களை இப்படிச் செய்யத் தூண்டும் என்றால், எதிர்காலத்தில் இது விபரீதங்களுக்கு வழிவகுக்கும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். ‘ரெட் சிப்’ தொழில்நுட்பம் நிஜத்திலும் சிக்னல் கோளாறு வடிவில் வரக்கூடும் என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி. தற்போது அந்த ரோபோவின் மென்பொருள் சரி செய்யப்பட்டு வருகிறது.





