Amma Unavagam Revamp: அம்மா உணவகங்களுக்குப் புத்துயிர் ஊட்டும் முதலமைச்சர் விஜய்! உள்கட்டமைப்பை மேம்படுத்தி தரமான உணவு வழங்க அதிரடி உத்தரவு; நகராட்சி நிதியைப் பயன்படுத்த அனுமதி!

தமிழகத்தில் ஏழை, எளிய மக்களின் பசியைப் போக்கும் மிக முக்கிய உன்னத திட்டமாக விளங்கும் ‘அம்மா உணவகங்களை’ முழுமையாகப் புதுப்பித்து, ஏழை எளிய மக்களுக்குத் தொடர்ந்து தரமான, சுவையான உணவுகளை வழங்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் தற்பொழுது அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக அரசுத் துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பிறப்பித்துள்ள புதிய சுற்றறிக்கையில், அம்மா உணவகங்களின் உள்கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான பல்வேறு முக்கிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

முதுலமைச்சரின் இந்த புதிய உத்தரவின்படி, மாநிலம் முழுவதும் பல்வேறு வார்டுகளில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களைப் புனரமைத்து, அங்கு பழுதடைந்துள்ள உள்கட்டமைப்பு வசதிகளை உடனடியாக மேம்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த உணவகங்கள் மூலமாகப் பொதுமக்களுக்கு தினசரி வழங்கப்படும் காலை, மதிய உணவு வகைகள் மிகவும் தரமானதாகவும், சுத்தமானதாகவும், அதே நேரத்தில் சுவையானதாகவும் இருப்பதை அதிகாரிகள் தொடர்ந்து கள ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என்றும் அதில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மறுசீரமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை எவ்வித நிதித் தொய்வுமின்றி மிக விரைவாகச் செய்து முடிக்கும் பொருட்டு, அந்தந்த நகராட்சி மற்றும் மாநகராட்சி நிதியை நேரடியாகப் பயன்படுத்திக் கொள்ள அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கட்டிட பழுதுபார்ப்பு, புதிய சமையல் உபகரணங்கள் வாங்குதல் போன்ற பணிகள் உடனுக்குடன் மேற்கொள்ளப்படும்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  Secretariat Action: அதிரடி காட்டிய முதலமைச்சர் விஜய்! 10 மணிக்குள் வராவிட்டால் அவ்ளோதான்; அலறியடித்து ஓடிவந்த தலைமை செயலக அதிகாரிகள்; 90% பேர் ஆன்-டைம்!

ஏழை மற்றும் அடித்தட்டு நடுத்தர மக்கள் தினசரி பெரிதும் நம்பியிருக்கும் இந்த அம்மா உணவகங்களில் சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவு வகைகள் எவ்விதத் தடையுமின்றி, எப்போதும் தடையின்றி மக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய அனைத்துத் தேவையான நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் தனது அதிகாரப்பூர்வ உத்தரவில் மிகத் தீவிரமாக வலியுறுத்தியுள்ளார். அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால் விளிம்புநிலை மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.