தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள புதிய திருப்பமாக, தாம்பரம் தொகுதி தமிழக சட்டமன்ற வேட்பாளரும், தமிழக அமைச்சரவையில் முக்கியப் பொறுப்பில் மனிதவள மேலாண்மை மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலத்துறை அமைச்சருமான ஆர். சரத்குமார் அவர்கள், கிரிக்கெட் மைதானத்தில் அமர்ந்து போதை மாத்திரையைப் பொடியாக்கி நுகர்ந்ததாக (கொக்கைன் பயன்பாடு) சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் வெளியாகி வரும் வீடியோக்கள் ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியுள்ளன. இந்த விவகாரத்தில் தார்மீகப் பொறுப்பேற்று அமைச்சர் ஆர். சரத்குமார் அவர்கள் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும், அவரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி, சென்னையில் திமுக மாணவரணி சார்பில் இன்று பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
ஆரம்பத்தில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் அமைதியான முறையில் நடத்தத் திட்டமிடப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம், காவல்துறையின் திடீர் தடை மற்றும் அதிரடி கைது நடவடிக்கைகளால் சென்னையின் முக்கியப் பகுதிகளில் பெரும் காட்டாற்று வெள்ளமாக, சாலை மறியலாக மாறியது.
இந்தப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய திமுகவின் முக்கியத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பி.கே. சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசுகையில் காவல்துறையின் அராஜகப் போக்கைக் கடுமையாகச் சாடினார். “இந்த ஆர்ப்பாட்டத்திற்காக நேற்று சட்டம் மற்றும் விதிகளின்படி முறையாக மனு அளித்திருந்தோம். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அனுமதி மறுக்கப்பட்டு, காவல்துறையின் அறிவுறுத்தலின்படிதான் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் பகுதியை ஒப்புக்கொண்டோம். ஆனால், காலையில் மேடை மற்றும் ஒலிபெருக்கி அமைக்கும் பணி தொடங்கியபோது, எழும்பூர் காவல் உதவி ஆணையர் ஜெகதீஷ் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அராஜகமாக ஈடுபட்டு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்றும் பாராமல் கழுத்தில் கை வைத்து எங்களை வாகனத்தில் ஏற்றினர். மேடை அமைக்கும் தொழிலாளர்களையும் கைது செய்து, வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். நாங்கள் என்ன தீவிரவாத இயக்கமா நடத்துகிறோம்?” என்று அனல் பறக்கக் கேள்வி எழுப்பினார்.
காவல்துறை 5 நாட்களுக்கு முன்பே அனுமதி கேட்காததால் தான் அனுமதி மறுக்கப்பட்டது எனக் கூறுவதை நிராகரித்த சேகர்பாபு, 45 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் ஒரே நாளில் அனுமதி பெற்றுப் போராடிய நிகழ்வுகள் பல உண்டு என்றார். “காவல்துறை முறையாக அனுமதி மறுத்திருந்தால் நாங்கள் நீதிமன்றத்தை நாடியிருப்போம்” என்று குறிப்பிட்ட அவர், “எங்களை அச்சுறுத்தலால் முடக்கிவிட முடியாது. திமுக என்பது அடிக்க அடிக்க எழும்புகின்ற பந்து, அரைக்க அரைக்க மணக்கின்ற சந்தனம், தீய்க்கத் தீய்க்க ஜொளிக்கின்ற வைரம்! தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கட்டளையை ஏற்று, ஒரே இடத்தில் நடக்கவிருந்த போராட்டத்தை இன்று சென்னையின் மூன்று இடங்களில் மாற்றி மறியல் களமாக மாற்றியுள்ளோம். இது தவெக அரசுக்கு ஒரு ‘ட்ரைலர்’ தான். எங்களின் இந்த நியாயமான போராட்டம் தொடர்ந்து நீடிக்கும்” என்று அதிரடியாக முழங்கினார்.
பொதுமக்களுக்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “இதுவும் மக்களுக்காக, தமிழ்நாட்டின் மனிதவளத்தைக் காக்கவும் போதை கலாச்சாரத்தை ஒழிக்கவும்தான்” என்றார். “கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முதல்வர் விஜய் மாரத்தான் ஓடியதால் என்ன பலன்? தன் அமைச்சரவையில் இருக்கும் போதை ஆசாமிகளுக்கே அவரால் அறிவுரை கூற முடியவில்லை. அமைச்சர் ஆர். சரத்குமார் அவர்கள் கொக்கைன் பயன்படுத்தியுள்ளார் என்பதற்கான மருத்துவப் பரிசோதனை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும். அவரைப் பதவி நீக்கம் செய்யும் வரை எங்களின் போராட்டம் ஓயாது” என்று மிகத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இந்தத் திடீர் அரசியல் திருப்பங்களால் ஒட்டுமொத்த சென்னையே இன்று பரபரப்பான சூழலில் இயங்கியது.





