Donald Trump Skips Son’s Wedding: “மகனின் திருமணத்தை விட நாடே முக்கியம்!” மூத்த மகன் திருமணத்தைப் புறக்கணித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்; ட்ரூத் பக்கத்தில் வெளியிட்ட அதிரடி காரணம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது சொந்தக் குடும்ப நிகழ்வை விட நாட்டின் பாதுகாப்பு மற்றும் சர்வதேசப் விவகாரங்களுக்கே தற்பொழுது முன்னுரிமை அளித்துள்ளார். அவரது மூத்த மகனான டொனால்ட் டிரம்ப் ஜூனியரின் திருமணம் இந்த வார இறுதியில் பஹாமாஸ் தீவில் மிகவும் பிரத்தியேகமாக நடைபெற உள்ள நிலையில், இந்த விழாவில் தம்மால் கலந்துகொள்ள இயலாது என்பதை அதிபர் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சொந்த சமூக வலைத்தளமான ‘ட்ரூத் சமூக வலைத்தளத்தில்’ (Truth Social) விரிவான விளக்கம் ஒன்றை தற்பொழுது பதிவிட்டுள்ளார்.

தனது அதிகாரப்பூர்வப் பதிவில் குறிப்பிட்டுள்ள அதிபர் டிரம்ப், “எனது மூத்த மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியரின் திருமணத்தை நேரில் சென்று வாழ்த்த எனக்கு மிகுந்த விருப்பம் இருந்தது. இருப்பினும், தற்பொழுது நிலவி வரும் அரசாங்கம் சார்ந்த அசாதாரண சூழல்கள் மற்றும் அமெரிக்க நாட்டின் மீது நான் கொண்டுள்ள அளப்பரிய காதல் காரணமாக என்னால் இந்த திருமண விழாவில் பங்கெடுக்க முடியவில்லை” என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நாட்டின் தலைவராகத் தற்போதைய இக்கட்டான காலகட்டத்தில், தான் பஹாமாஸ் செல்லாமல் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையிலேயே தங்கியிருந்து பணிகளைக் கவனிப்பது மிகவும் அவசியமானது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

டிரம்ப் ஜூனியர் மற்றும் பிரபல மாடலான பெட்டினா ஆண்டர்சன் ஆகியோரின் இந்த திருமணம் மிகவும் ரகசியமாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சர்வதேச அளவில் தற்பொழுது நிலவி வரும் அமெரிக்கா-ஈரான் இடையேயான கடுமையான போர்ச் சூழல் மற்றும் பல்வேறு உள்நாட்டு நிர்வாகப் பிரச்சினைகள் காரணமாக, அதிபரால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற முடியாத கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து முன்னதாக செய்தியாளர்களிடம் பேசியிருந்த டிரம்ப், “எனக்கு அங்கு வர வேண்டும் என்றுதான் உள்ளது, ஆனால் தற்பொழுது ‘ஈரான்’ விவகாரம் உள்ளிட்ட பல முக்கிய கோப்புகள் எனது மேஜையில் உள்ளன. இது சரியான நேரமில்லை” என்று குறிப்பிட்டிருந்தார். குடும்பப் பாசத்தை விட நாட்டின் பாதுகாப்பே ஒரு தலைவனுக்கு முக்கியம் என்பதை டிரம்ப் இதன் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.