சர்வதேச செய்திகள்
வாடகைக்குக் கணவன்! எந்த நாட்டுல தெரியுமா? பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் விசித்திர சேவை!
"வாடகைக்குக் கணவன்" - லாத்வியா நாட்டில் ஆண்களை விடப் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகமாக உள்ள நிலையில், வீட்டின் உள்கட்டமைப்பு வேலைகளுக்கு உதவும் இந்த விசித்திரச் சேவை பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
உக்ரைன் போரை முடிக்க தயார்! புதின், ஜெலன்ஸ்கி பற்றி டிரம்ப் கூறிய பரபரப்பு தகவல்!
உக்ரைன் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் ரஷ்ய அதிபர் புதினுடன் உடன்பாடு எட்ட விரும்புவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். தலைவர்களிடையேயான தனிப்பட்ட வெறுப்பே பேச்சுவார்த்தைக்குத் தாமதம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் ₹95 லட்சம் கோடி நிதியா? வாக்காளர்களை விலை பேசுகிறாரா டிரம்ப்… தூக்கமிழந்த நிபுணர்கள்!
அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றி பெற்றால், தகுதியுள்ள 27 கோடி மக்களுக்கும் தலா 5,000 டாலர் (சுமார் ₹4.2 லட்சம்) பரிசு வழங்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். 95 லட்சம் கோடி ரூபாய் செலவிலான இந்த அறிவிப்பு உலகப் பொருளாதார வல்லுநர்களைப் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
ராணுவத்திற்கு நிதி திரட்ட உக்ரைன் எடுத்த அதிர்ச்சி முடிவு! ஆபாச உள்ளடக்கத்தை சட்டப்பூர்வமாக்கத் திட்டம்!
ரஷ்யாவிற்கு எதிரான போர் தீவிரமடைந்து வரும் சூழலில், உக்ரைன் ராணுவத்திற்குத் தேவையான நிதி மற்றும் ட்ரோன்களை வாங்குவதற்காக ஆபாச உள்ளடக்கத்தை (Pornography) சட்டப்பூர்வமாக்கி அதன்மூலம் வரி வசூலிக்க உக்ரைன் நாடாளுமன்றத்தில் புதிய மசோதா முன்வைக்கப்பட்டுள்ளது.
9 நாட்கள் மரண போராட்டம்! ‘ஹரே கிருஷ்ணா’ மந்திரம் சொல்லி நேபாள சுரங்கத்தில் உயிர் பிழைத்த வாலிபர்!
நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் திரிசூலி நீர்மின் திட்ட சுரங்கப்பாதைக்குள் சிக்கிய இருவர் 9 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு தொழிலாளி ‘ஹரே கிருஷ்ணா’ மந்திரம் உச்சரித்தே நம்பிக்கை இழக்காமல் உயிர் பிழைத்ததாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
ஃபோக்ஸ்வேகன் அதிரடி முடிவு: 2030-க்குள் 1 லட்சம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டம்!
அமெரிக்காவில் விதிக்கப்படும் அதிக வரிகள் மற்றும் சீன வாகன நிறுவனங்களின் கடும் போட்டியால் ஏற்பட்டுள்ள நிதி இழப்பை ஈடுகட்ட, 2030-ஆம் ஆண்டுக்குள் 1 லட்சம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
286 நாட்கள் கடல் பயணம்: தாய்லாந்து பட்டாயாவில் 5,000 அமெரிக்க கடற்படை வீரர்கள்! தீவிர சோதனையில் இறங்கிய காவல் துறை!
மத்திய கிழக்கில் 286 நாட்கள் நீடித்த கடுமையான போர்ப் பணிக்குப் பிறகு, அமெரிக்காவின் 'USS ஆபிரகாம் லிங்கன்' போர்க்கப்பலின் 5,000 மாலுமிகள் ஓய்வுக்காகத் தாய்லாந்தின் பட்டாயா நகரிற்கு வருகை தந்துள்ளனர். இதனிடையே, நகரில் அசம்பாவிதங்களைத் தடுக்கக் காவல் துறை தீவிர சோதனைகளை முடுக்கிவிட்டுள்ளது.
‘2,300 பேர் பலி!’ அதிவேகமாகப் பரவும் எபோலா வைரஸ்… கங்கோவில் தொடரும் கொடூரம் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
"24 மணிநேரத்தில் 101 பேருக்குத் தொற்று, 33 பேர் பலி!" காங்கோவில் மிகக் கொடூரமாகப் பரவி வரும் எபோலா வைரஸால் இதுவரை 2,300க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்!









