Tamil Nadu Politics
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! அதிமுக விருப்பமனு விநியோகம் தொடங்கியது – எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பு!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்காக அதிமுக சார்பில் போட்டியிட விரும்பும் தொண்டர்கள் இன்று முதல் 3 நாட்களுக்குத் தலைமைக் கழகத்தில் விருப்பமனு வழங்கலாம் எனப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
நடிகை குறித்து அவதூறு பேச்சு! சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு முதல்வர் விஜய் காரசார எச்சரிக்கை!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் உரையாற்றிய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், பெண்கள் குறித்து இரட்டை அர்த்தத்தில் அவதூறு கருத்துகளைப் பரப்புவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சட்டப்பேரவையில் விஜய் செய்த அந்த சைகை! மிசா விவாதம் மீண்டும் சூடுபிடித்த பின்னணி என்ன?
சட்டப்பேரவையில் மிசா சட்டம் குறித்துப் பேசியபோது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் செய்த சைகை பெரும் அரசியல் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. 1976 அவசரநிலைக் காலத்தில் மு.க. ஸ்டாலின் அனுபவித்த மிசா சிறைவாசம் மற்றும் சி. சிட்டிபாபுவின் தியாகத்தை நினைவூட்டும் குறியீடா இது என்ற கேள்வி எழுந்துள்ளது.
முதல்வர் ஜோசப் விஜய் குறித்து அவதூறு பதிவு! ஆன்லைன் தொழிலதிபர் பிரவீன் கணேசன் டெல்லி விமான நிலையத்தில் கைது!
முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மற்றும் பிரபல நடிகை குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான விளம்பரம் மற்றும் கருத்துகளை பதிவிட்ட தொழிலதிபர் பிரவீன் கணேசனை சென்னை சைபர் கிரைம் பொலிஸார் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.
9-ம் தேதி ‘த.வெ.க’ கூட்டணி கூட்டம்! ம.தி.மு.க பங்கேற்குமா? வைகோ அளித்த அதிரடி விளக்கம்!
த.வெ.க தலைமையில் வரும் 9-ம் தேதி நடைபெறவுள்ள கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் ம.தி.மு.க பங்கேற்பது குறித்து பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். அத்துடன், சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை செய்யப்படுவதால் மக்களுக்குத் தெளிவு ஏற்படுவதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.
“அரசியல் பேசத் தடை! நலம் விசாரிக்க மட்டுமே அனுமதி!”: தைலாபுரத்தில் வைரலாகும் ராமதாஸின் அதிரடி பேனர்!
உடல்நலக் குறைவு மற்றும் மருத்துவர்களின் அறிவுறுத்தலால் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், தைலாபுரம் தோட்டத்தில் தன்னைச் சந்திக்க வரும் பொதுமக்கள் நலம் விசாரிக்க மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அரசியல் பற்றிப் பேசக் கூடாது என்றும் அதிரடி கட்டுப்பாடுகளை விதித்து பேனர் வைத்துள்ளார்.
கொளத்தூர் தொகுதி விவகாரம்: மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை அதிரடியாகத் தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவின் வெற்றியை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு விசாரணைக்கு ஏற்க மறுத்து அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளது.
Kolathur Constituency Case: மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் நாளை காலை சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வி.எஸ்.பாபுவின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில், நாளை காலை 10.30 மணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
மேட்டூர் அணை திறப்பில் விளம்பர அரசியல்! தவெக அரசை விமர்சித்து வெளுத்து வாங்கிய சீமான், டிடிவி தினகரன்!
மேட்டூர் அணையைத் திறக்கும் விவகாரத்தில் தவெக அரசு வெறும் 'ரீல்ஸ்' விளம்பர அரசியலில் ஈடுபடுவதாகவும், மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதாகவும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கடுமையாகச் சாடியுள்ளனர்.









