மு.க.ஸ்டாலின்
“முன்னாள் முதல்வர் ஸ்டாலினைக் கொச்சைப்படுத்தும் பாடி லாங்வேஜ்!” – பேரவையில் முதல்வர் விஜய்க்கு எதிராக எ.வ.வேலு கொந்தளிப்பு!
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் மிசா குறித்தும் முதல்வர் பேசிய விதம் விதிகளை மீறிய செயல் என்றும், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினைக் கொச்சைப்படுத்தும் வகையில் அவரது உடல் மொழி இருந்தது என்றும் எ.வ.வேலு சாடியுள்ளார்.
சட்டப்பேரவையில் வெடித்த ‘மிசா’ சர்ச்சை! அமைச்சர் நிர்மல் குமார் கிளப்பிய புதிய புயல் – முழு விவரம்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மிசா காலகட்ட கைது நடவடிக்கைகள் குறித்துப் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், மு.க. ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை என்றும், இந்திரா காந்தி மற்றும் பெண்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கிலேயே கைது செய்யப்பட்டார் என்றும் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டப்பேரவையில் விஜய் செய்த அந்த சைகை! மிசா விவாதம் மீண்டும் சூடுபிடித்த பின்னணி என்ன?
சட்டப்பேரவையில் மிசா சட்டம் குறித்துப் பேசியபோது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் செய்த சைகை பெரும் அரசியல் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. 1976 அவசரநிலைக் காலத்தில் மு.க. ஸ்டாலின் அனுபவித்த மிசா சிறைவாசம் மற்றும் சி. சிட்டிபாபுவின் தியாகத்தை நினைவூட்டும் குறியீடா இது என்ற கேள்வி எழுந்துள்ளது.
கொளத்தூர் தொகுதி விவகாரம்: மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை அதிரடியாகத் தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவின் வெற்றியை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு விசாரணைக்கு ஏற்க மறுத்து அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளது.
Kolathur Constituency Case: மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் நாளை காலை சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வி.எஸ்.பாபுவின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில், நாளை காலை 10.30 மணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
ஸ்டாலினின் கோளத்தூர் வழக்கு… விஜயின் 5 தொகுதிகளுக்கும் சிக்கல்! சென்னை உயர்நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு!
திருச்சி கிழக்கு உட்பட 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான தடையை செப்டம்பர் 8 வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே கோளத்தூர் தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்து வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
“தனித்து விடப்பட்டது யார்?” – ஸ்டாலின் விமர்சனத்திற்கு அமைச்சர் ரமேஷ் அதிரடி பதிலடி!
"சட்டமன்றத்தில் பேச வேண்டியவர் இன்று வீட்டிலிருந்து பார்க்கும் நிலைக்குத் தனித்து விடப்பட்டுள்ளார்" என மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.
“தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்துத் தனிமைப்பட்டு நிற்கிறார் முதலமைச்சர்!”: மேகதாது விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் காரசாரமாக எக்ஸ் தளத்தில் நக்கலோ நக்கல்ஸ்!
"கர்நாடகம் கேட்டைச் சாத்திவிட்டது... இனியேனும் ஆலோசனைகளோடு அணுகுங்கள்!" - மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சரைக் கடுமையாக விமர்சித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவு!
“முதலைக் கண்ணீர் வடிக்க வேண்டாம்!” – மருத்துவ இடங்கள் விவகாரத்தில் ஸ்டாலினுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதிலடி!
மருத்துவ இடங்களை அகில இந்திய தொகுப்பிற்கு ஒப்படைத்தது தொடர்பாக தவறான தகவல்களைப் பரப்பி மு.க.ஸ்டாலின் முதலைக் கண்ணீர் வடிக்க வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.
“எங்கு ஒளிந்து கொண்டிருக்கிறார்?” – தொடரும் காவல் மரணங்கள்.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் காரசார கேள்வி!
எதிர்க்கட்சியாக இருந்தபோது கேள்வி கேட்ட விஜய், முதல்வரானதும் மன்னிப்புக் கேட்கக் கூடத் துணிவின்றி ஒளிந்து கொண்டிருப்பதாகத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாகச் சாடியுள்ளார்.









