“விஜய்க்கு அவ்வளவு தைரியமா?” – ‘ஸ்டாலின் அங்கிள்’ விவகாரத்தில் கொந்தளித்த சத்யராஜ்; ஜெயலலிதாவை ஒப்பிட்டு ஆவேசம்!

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி நகர்ந்து வரும் வேளையில், சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களுக்கு இடையிலான வார்த்தை போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை “ஸ்டாலின் அங்கிள்” என்று கிண்டலாகக் குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், மூத்த நடிகர் சத்யராஜ் மேடையில் பேசிய பேச்சு தற்போது இணையதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

திமுக கூட்டத்தில் பேசிய சத்யராஜ், விஜய்யின் இந்த விமர்சனத்தைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவித்தார். “படப்பிடிப்பு தளங்களில் மிகவும் மரியாதையாக நடக்கும் தம்பி விஜய், பொது மேடையில் ஒரு முதலமைச்சரை ‘அங்கிள்’ என்று மரியாதையில்லாமல் அழைப்பது சரியல்ல. ஸ்டாலின் அவர்களின் நிதானத்தை, விஜய் பலவீனமாகக் கருதக் கூடாது” என்று அவர் எச்சரித்தார்.

தொடர்ந்து பேசிய சத்யராஜ், கடந்த காலச் சம்பவங்களை நினைவூட்டினார். “தலைவா படத்தின் போது சிக்கல் ஏற்பட்டபோது, அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவை ‘அம்மா’ என்று அழைத்துக் கெஞ்சினாரே விஜய், அப்போது அவரை ‘ஆண்டி’ என்று கூப்பிடத் தைரியம் இருந்ததா? அப்படி மட்டும் சொல்லியிருந்தால் இந்நேரம் அவரை கொத்து புரோட்டா போட்டிருப்பார்கள்” எனத் தனது பாணியில் கிண்டலாகக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  TVK Vijay Tirunelveli Speech : "இது கேர்-டேக்கர் கவர்மெண்ட்!" – நெல்லையில் கர்ஜித்த தளபதி விஜய்!

சத்யராஜின் இந்த விமர்சனம் விஜய் ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், ஸ்டாலின் மீதான தனிப்பட்ட விமர்சனங்கள் எல்லையைத் தாண்டுவதாக திமுக தரப்பு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. அரசியல் நாகரிகம் அவசியம் என்பதைச் சுட்டிக்காட்டிய சத்யராஜ், “வெட்டி உதாரு விடுவதால் அறிவு வளராது” என்றும் விஜய்யைச் சாடினார்.

தமிழகத்தில் தற்போது திமுக மற்றும் தவெக (TVK) இடையே நேரடி மோதல் உருவாகியுள்ளது. விஜய்யின் அரசியல் வருகை கொங்கு மண்டலத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் எனக் கணிக்கப்படும் சூழலில், சத்யராஜ் போன்ற சீனியர் நடிகர்களின் இந்த அதிரடித் தாக்குதல் 2026 தேர்தல் களத்தை மேலும் பரபரப்பாக்கியுள்ளது. விஜய் தரப்பிலிருந்து இதற்கு என்ன பதில் வரப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Comment