Janani
தலைவர்களின் வரலாற்று முயற்சி: கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் வரிசையில் கர்நாடக முதல்வருடன் முதலமைச்சர் விஜய் பேச்சுவார்த்தை முன்முயற்சி! பலன் தருமா?
காவிரி நதிநீர் பிரச்சனையில் கர்நாடக முதல்வரைச் சந்தித்து தீர்வு காண தமிழக முதலமைச்சர் விஜய் எடுக்கும் முயற்சி வெற்றி பெற வேண்டும் என்றும், எம்ஜிஆர் பாணி அணுகுமுறை இதில் பலன் தரக்கூடும் என்றும் மூத்த பத்திரிகையாளர் கருத்து தெரிவித்துள்ளார்.
“மாணவர் போராட்டத்திற்கும் படத்திற்கும் தொடர்பில்லை! ‘ஜனநாயகன்’ பார்த்தால் மூளைக்கு சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் கூடும்!” – ‘ஜனநாயகன்’ திரைப்படம் குறித்து சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அதிரடி பேட்டி!
மாணவர் போராட்டத்திற்கும் 'ஜனநாயகன்' படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், இந்த படத்தைப் பார்ப்பதால் மூளைக்கு சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் ஏற்படுமே தவிர யாருடைய மூளையும் சலவை செய்யப்படாது என்றும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார்.
“214 திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமனம்! கோவில் அறங்காவலர் நியமனத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு!
தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 214 திருக்கோயில்களுக்கு பரம்பரை சாராத அறங்காவலர்கள் நியமனத்திற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மேலும் 21 நாட்கள் நீட்டிக்கப்பட்டு, ஆகஸ்ட் 12 மாலை 5.45 மணி வரை அவகாசம் வழங்கி அறிவிப்பு வெளியாகி உள்ளது.
“தவெக அரசை கவிழ்க்க முயன்ற வழக்கு!” – சென்னை நீதிமன்றத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்!
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசை கவிழ்க்க எம்.எல்.ஏ-க்களிடம் பேரம் பேசிய வழக்கில் முன்ஜாமீன் பெற்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, பிணை உத்தரவாதம் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார்.
“தங்க பிரியர்களுக்கு குட் நியூஸ்!” – சவரனுக்கு ரூ.2,160 வரை அதிரடி சரிவு: இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!
சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.270 குறைந்து ரூ.13,230-க்கும், வெள்ளி கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ரூ.2,40,000-க்கும் விற்பனையாகிறது. முழு விவரங்கள் இதோ.
“மாணவர்களுக்கு ரூ.15 லட்சம் வரை உதவித்தொகை!” – எஸ்பிஐ பிளாட்டினம் ஜூபிலி ஆஷா ஸ்காலர்ஷிப் 2026: விண்ணப்பிப்பது எப்படி?
நாடு முழுவதிலும் உள்ள 25,707 ஏழை எளிய திறமைமிக்க மாணவர்களுக்கு ரூ.100 கோடி மதிப்பில் நிதியுதவி வழங்கும் எஸ்பிஐ பிளாட்டினம் ஜூபிலி ஆஷா ஸ்காலர்ஷிப் 2026 திட்டத்திற்கு செப்டம்பர் 4-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிப்பது குறித்த முழு வழிகாட்டி.
“ஓட்டு போட்ட மக்கள் தான் பதில் சொல்லணும்!” – தவெக அரசை வெளுத்து வாங்கிய பிரேமலதா விஜயகாந்த் கொந்தளிப்பு!
ஆட்சிக்கு வந்து 50 நாட்களாகியும் அடிப்படைப் பணிகளை தவெக அரசு தொடங்கவில்லை என்றும், அரிசி விலை டன் ஒன்றுக்கு ரூ.15,000 உயர்ந்துள்ளதை கண்டித்து ஆகஸ்ட் 1-ம் தேதி ஒகேனக்கலில் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.









