Train Services Cancelled: “இன்று முதல் செப்.5 வரை ரயில் சேவை ரத்து!” – எழும்பூர் பணி எதிரொலி: தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கில் பல்வேறு மறுசீரமைப்பு மற்றும் உள்கட்டமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, எழும்பூர் ரயில் நிலைய யார்டு பகுதியில் புதிய நடைமேம்பாலத்திற்கான (Foot Over Bridge – FOB) பிரம்மாண்ட இரும்பு அமைப்புகளை (Girders) நிறுவும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக, சென்னை கடற்கரை – தாம்பரம் இடையேயான வழித்தடத்தில் மின்சார மற்றும் மின்சார ரயில் தடங்கல்கள் (Line Block/Power Block) அமல்படுத்தப்படவுள்ளன. ஆகஸ்ட் 25-ஆம் தேதி முதல் செப்டம்பர் 5-ஆம் தேதி வரையிலான காலத்தில் இரவு நேர மின்சார ரயில் சேவைகளில் தெற்கு ரயில்வே முக்கிய மாற்றங்களையும் பகுதி ரத்துகளையும் அறிவித்துள்ளது.

முழுமையாக ரத்து செய்யப்படும் மின்சார ரயில்கள்: சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு இரவு நேரத்தில் புறப்படும் பின்வரும் 4 மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன:

  • இரவு 10:20 மணி ரயில்

  • இரவு 11:20 மணி ரயில்

  • இரவு 11:40 மணி ரயில்

  • இரவு 11:59 மணி ரயில்

இதையும் படிக்க தவறாதீர்கள்:  'இந்தியாவின் நாளைய பிரதமர் விஜய் தான்!' பேரவையில் கில்லி சரத் காரசார பேச்சு... சட்டசபையில் பரபரப்பு!

பகுதியாக ரத்து செய்யப்படும் மின்சார ரயில்கள்:

  • திருமால்பூர் – சென்னை கடற்கரை: திருமால்பூரில் இருந்து இரவு 8:00 மணிக்கு புறப்படும் ரயில், தாம்பரம் – கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

  • கூடுவாஞ்சேரி – சென்னை கடற்கரை: கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 10:15 மற்றும் 11:20 மணிக்கு புறப்படும் ரயில்கள், தாம்பரம் – கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன.

  • செங்கல்பட்டு – சென்னை கடற்கரை: செங்கல்பட்டில் இருந்து இரவு 10:20 மற்றும் 11:00 மணிக்கு புறப்படும் ரயில்கள், தாம்பரம் – கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன.

  • சென்னை கடற்கரை – செங்கல்பட்டு (அதிகாலை சேவை): ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 7 வரை, சென்னை கடற்கரையில் இருந்து அதிகாலை 3:50 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில், கடற்கரை – தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, தாம்பரத்தில் இருந்தே புறப்படும்.

நேர மாற்றம் செய்யப்பட்ட ரயில்கள்:

  • சென்னை கடற்கரையில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு இரவு 9:45 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், இரவு 9:50 மணிக்கு தாமதமாகப் புறப்படும்.

  • சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு இரவு 10:20 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், இரவு 10:15 மணிக்கே முன்னதாகப் புறப்படும்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  ஓணம் பண்டிகை மெகா கிப்ட்! கேரளா செல்ல 100க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள்.. மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதிரடி அறிவிப்பு!

இரவு நேரத்தில் பயணிக்கும் பயணிகள் இந்த அட்டவணை மாற்றங்களைக் கவனித்து, தங்களின் பயணங்களைத் திட்டமிட்டுக்கொள்ளுமாறு தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.