தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் 214 திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் (Non-Hereditary Trustees) நியமனம் செய்வதற்கான ஆன்லைன் மற்றும் நேரடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தகுதியான நபர்கள் விண்ணப்பிப்பதற்கு வசதியாக தற்போது கால அவகாசம் மேலும் 21 நாட்கள் நீட்டிக்கப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அறங்காவலர் நியமனத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.@CMOTamilnadu | @TVKVijayHQ | @imrajmohan | @RameshOffcl |#CMJosephVijay | #TNOfficialUpdates | #TNDIPR | #TamilNadu | #TNGovt | #CMForThePeople | pic.twitter.com/inApT5vqLt
— TN DIPR (@TNDIPRNEWS) July 22, 2026
அதன்படி, விருப்பமும் தகுதியும் உள்ள ஆன்மீக அன்பர்கள் வருகின்ற 12.08.2026 அன்று மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களது விண்ணப்பங்களை இணையதளம் மூலமாகவோ அல்லது நேரில் சென்று அஞ்சல் மூலமாகவோ சம்பந்தப்பட்ட திருக்கோயில் அமைந்துள்ள மண்டல இணை ஆணையர் (Joint Commissioner) அலுவலகத்தில் நேரடியாகச் சமர்ப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கோயில் நிர்வாகங்களைச் செவ்வனே நடத்தவும், ஆன்மீகச் பணிகளைச் சீரமைக்கவும் இந்த அறங்காவலர் குழுக்கள் முக்கியப் பங்காற்றுவதால், தகுதியான நபர்கள் இந்த நீட்டிக்கப்பட்ட கால அவகாசத்தைச் சரியாகப் பயன்படுத்தி உடனே விண்ணப்பித்து பயன்பெறுமாறு இந்து சமய அறநிலையத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.





