“கோப்புல பாரு என் கையெழுத்து இருக்கும்!” விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கொடுத்த மாஸ் பதிலடி! அப்பாவை அங்கே தேடாதீங்க!: சட்டமன்றத்தில் விஜய் கேட்ட கேள்வி! திருவாரூர் திருமண விழாவில் ஸ்டாலின் காட்டிய அதிரடி! “கூட்டணியே தேவையில்லைனு மக்கள் சொல்றாங்க!” பரபரப்பு பேச்சு!

தமிழக அரசியல் களத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கும், எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையே நாளுக்கு நாள் மோதல் முற்றி வரும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று திருவாரூரில் அதற்கு மிக அதிரடியான பதிலடியைக் கொடுத்துள்ளார். திருவாரூர் – காட்டூரில் அமைந்துள்ள கலைஞர் கோட்டத்தில் நடைபெற்ற திமுக விவசாயத் தொழிலாளர் அணித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உ. மதிவாணன் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்கள் கதிரவன் – மௌனிகாவை வாழ்த்திப் பேசிய மு.க.ஸ்டாலின், சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் எழுப்பிய விமர்சனங்களுக்கு நேரடியாகப் பதிலளித்தார்.

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் மின்வெட்டு மற்றும் டெல்டா பாசன நீர் விவகாரங்கள் குறித்துக் கேள்வி எழுப்பியபோது, முதலமைச்சர் விஜய் “உங்க அப்பாவை எங்கே காணோம்?” எனக் கேட்டதற்கு ஸ்டாலின் ஆவேசமாகப் பதிலடி கொடுத்தார். “அப்பாவை அங்கே தேடாதீர்கள், அவர் மக்கள் மனதில் பதிந்திருக்கிறான்; நீங்கள் தேடும் இடத்தில் நான் இருக்க மாட்டேன், மக்கள் தேடும் இடத்தில் நிச்சயமாக நான் முதல் ஆளாக நிற்பேன்” என்று ஸ்டாலின் முழங்கினார். மேலும், கோட்டையில் உள்ள மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் ஆகிய கோப்புகளில் ‘மு.க.ஸ்டாலின்’ என்ற தன் கையெழுத்து இருக்கும் வரை, தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் திட்டம் இருக்கும் வரை இந்த ஸ்டாலின் தான் முதலமைச்சர் என்றும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  பிரேமலதா அதிரடி என்கவுண்டர் பேச்சு!: "மிருகங்களுக்கு என்கவுண்டர் ஒன்றே தீர்வு!" கும்மிடிப்பூண்டி கொடூரம்... ஆளுநர் உரை குறித்து பிரேமலதா விஜயகாந்த் காட்டம்!

அரசியல் கூட்டணி குறித்துப் பேசிய அவர், கலைஞர் காட்டிய வழியில் கூட்டணியை என்றும் தாம் பாதுகாப்பதே கடமை என்றார். எனினும், தற்போதைய சூழலில் கூட்டணியே தேவையில்லை என்றுதான் மக்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்றும், நிச்சயமாக அதனைத் திமுக விரைவில் பரிசீலிக்கும் என்றும் கூறி அரசியல் அரங்கில் புதிய பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.