விஜய் 2022-லேயே என்கிட்ட சொன்னாரு.. காங்கிரஸ்ல சேர சொன்னேன்! மூத்த பத்திரிகையாளர் அதிரடி ரகசிய உடைப்பு!: “உதயநிதி உழைப்பாளி இல்ல, இபிஎஸ் தான் உழைப்பாளி!” தவெக ஆட்சிக்கு பின்னால இருக்கும் நிஜமான காரணம் இதுதான்!

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சா. ஜோசப் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு (ஜூன் 22), தனியார் யூடியூப் சேனலில், சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னணி மூத்த பத்திரிகையாளர் ஒருவர், இதுவரை வெளியில் வராத பல அதிரடி அரசியல் ரகசியங்களையும் தவெக அரசின் தற்போதைய சவால்களையும் உடைத்துப் பேசியுள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டின் இறுதியிலோ அல்லது 2023 இன் தொடக்கத்திலோ பனையூரில் உள்ள இல்லத்தில் வைத்துத் திரு. விஜய் அவர்களை நான் ரகசியமாகச் சந்தித்தேன். ஒரு நண்பரின் ஏற்பாட்டில் நடைபெற்ற அந்தச் சந்திப்பில், கிட்டத்தட்ட 4 மணி நேரம் பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து நாங்கள் விரிவாக விவாதித்தோம். அப்போது தான் அரசியலுக்கு வர விரும்புவதாக விஜய் என்னிடம் தெரிவித்தார். ஆனால், 1,000 கோடி ரூபாய் சினிமா பிசினஸ் இருக்கும் நிலையில், இன்னும் 5 ஆண்டுகளுக்கு நீங்கள்தான் தமிழ்நாட்டின் நம்பர் ஒன் ஹீரோ, அதனால் இந்த முடிவை மாற்றிக் கொள்ளுங்கள் என நான் அவரைத் தடுத்தேன் (Discourage).

அதற்குப் பதிலளித்த விஜய், ‘எனக்கு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது’ எனத் தீர்க்கமாகக் கூறினார். அப்படியானால் நீங்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து விடுங்கள், ராகுல் காந்தி உங்கள் நண்பர் என்பதால் உங்களை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கத் தயங்க மாட்டார்கள், சினிமா மற்றும் அரசியல் என இரண்டு குதிரைகளில் சவாரி செய்வதைத் தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றேன். அதற்கு அவர், ‘நான் தனியாகத்தான் கட்சி ஆரம்பித்துச் செயல்படுவேன், இன்னும் ஒரு படம் மட்டுமே பாக்கி இருக்கிறது, சினிமாவை முழுமையாக விட்டு விடுகிறேன்’ என்றார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  TN Assembly Passes Unanimous Resolution Against Mekedatu! "ஒரு துளி நீர் கூட பறிபோகக் கூடாது!" கர்நாடகாவின் திட்டத்தை முறியடிக்க பேரவை ஒருமனதாக முடிவு! ஒன்றிய அரசுக்கு பறந்த முக்கிய உத்தரவு!

மேலும் 2026 தேர்தலில் தனக்கு யார் போட்டியாக இருப்பார்கள் என்று விஜய் கேட்ட போது, நான் எடப்பாடி பழனிசாமி (EPS) என்று கூறினேன். ஆனால் விஜய் அதை மறுத்து, ‘இல்லை, உதயநிதி ஸ்டாலின் தான் எனக்குப் போட்டியாக இருப்பார்’ என்றார். இபிஎஸ் அடிமட்டத்திலிருந்து வந்த உழைப்பாளி, ஆனால் உதயநிதி பணக்கார வீட்டில் வளர்ந்த செல்லப் பிள்ளை, அவருக்கும் இபிஎஸ்-க்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன என நான் விவரித்தேன். இருப்பினும் உதயநிதிதான் போட்டி என்பதில் விஜய் உறுதியாக இருந்தார். அந்தத் தீவிரமான இலக்கும் விடாமுயற்சியும்தான் (Determination) இன்று அவரை இந்த முதல்வர் நாற்காலியில் கொண்டு வந்து உட்கார வைத்துள்ளது.

தவெக-வின் இந்த மாபெரும் வெற்றிக்கு இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளப் பிரச்சாரங்கள் வெறும் ஆட்-ஆன் (Add-on) மட்டுமே தவிர, அதுவே முழுமையான காரணம் அல்ல. கடந்த 60 ஆண்டுகால இரு திராவிட கட்சிகளின் மீதும் மக்களுக்கு ஏற்பட்ட கடுமையான அயர்ச்சி மற்றும் அதிருப்திதான் விஜய்யின் பிரதான பலம். தீவிரமான அல்லது பிடிவாதமான கொள்கைகள் எதுவும் இல்லாமல், முற்றிலும் மக்கள் நலனை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட ‘லூஸ் ஐடியாலஜி’ (Loose Ideology) முறையைக் கையாண்டது விஜய்க்குப் பெரிய பிளஸ் ஆக அமைந்துவிட்டது. மேடைகளில் தொல்காப்பியப் பூங்கா, புறநானூறு, சிலப்பதிகாரம் எனப் பேசிவிட்டுப் பின்புறம் கொள்ளையடிப்பவர்களை விட, தீவிர கொள்கை உரை பேசாவிட்டாலும் மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் தலைவரை மக்கள் ஏற்றுக்கொண்டு 1 கோடியே 72 லட்சம் ஓட்டுகளை வாரி வழங்கியுள்ளனர்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  திருப்பதிக்கு போறீங்களா? ஜூன் 25 முதல் தொடங்கும் பிரம்மாண்ட திருவிழா! பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோவில் பிரம்மோற்சவ விழா தேதி அறிவிப்பு! ஜூன் 23-ல் நடக்கும் மூலவர் சன்னதி ஆன்மீக தூய்மைப் பணி!

தவெக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழக அரசுத் துறைகளில் நினைத்துப்பார்க்க முடியாத பல பாசிட்டிவ் மாற்றங்கள் நடந்து வருகின்றன. அரசு அலுவலகங்களில் லஞ்சம், ஊழலை ஒழிக்கவே முடியாது என்ற நிலையை மாற்றி, தற்பொழுது வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் (RTO), பத்திரப்பதிவுத் துறை மற்றும் சிஎம்டிஏ (CMDA) போன்ற துறைகளில் அதிகாரிகள் லஞ்சம் வாங்கப் பயப்படும் சூழல் உருவாகியுள்ளது.

தேர்தலுக்குக் கோடி கோடியாகச் சம்பாதித்துச் செலவு செய்யாததால், தவெக அமைச்சர்களுக்கோ அல்லது எம்எல்ஏ-க்களுக்கோ லஞ்சம் வாங்க வேண்டிய கட்டாயம் இல்லாமல் போய்விட்டது. விஜய்க்கும் தனிப்பட்ட முறையில் பணம் தேவையில்லை என்பதால், ‘நீ லஞ்சம் வாங்கினாலும் நான் உன்னை சும்மா விடமாட்டேன்’ என்று அதிகாரிகளுக்குக் கண்டிப்பு காட்டி வருகிறார். இதனால் 10 பைசா செலவில்லாமல் தங்களது விண்ணப்பங்கள் நகர்வதாகப் பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது ஒரு கனவு ஆட்சி போலத் தோன்றுகிறது.

இருப்பினும் இந்த ஆட்சி தொடர்ந்து நீடிக்குமா என்பதில் எனக்கு முழுமையான நம்பிக்கை இல்லை. ஏனெனில் தவெக-வின் இந்த ஊழல் எதிர்ப்புச் செயல்பாடுகளை திமுக, அதிமுக, பாஜக, பாமக, விசிக மற்றும் சில கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட விரும்பவில்லை. இவ்வளவு பெரிய அரசியல் சக்திகளைப் பகைத்துக் கொண்டு 24 மணி நேரமும் விழிப்போடு இருந்தால் மட்டுமே ஆட்சியைத் தக்க வைக்க முடியும்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  "கல்வியே வாழ்வின் வெற்றிக்குத் துணை!" +2 ரிசல்ட்: மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின், தவெக விஜய், அண்ணாமலை மற்றும் அன்பில் மகேஷ் அட்வைஸ் கலந்த வாழ்த்துகள்!

கடந்த ஒரு வார காலமாகத் தவெக எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்கி இந்த ஆட்சியைக் கவிழ்க்க திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தங்களது பெரும் பணபலத்தோடு கடுமையான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. திமுகவிடம் குறைந்தபட்சம் 1 லட்சம் கோடி முதல் 2 லட்சம் கோடி ரூபாய் வரை பணம் உள்ளதாகப் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. கொள்கை பிடிப்பில்லாத சில தவெக எம்எல்ஏ-க்கள் இந்தத் தற்காலிகப் பதவி ஆசை மற்றும் பணத்திற்கு விலை போக வாய்ப்புள்ளது. இத்தகைய மாபெரும் அரசியல் சதித் திட்டங்களையும், பணநாயக சவால்களையும் முதல்வர் விஜய் எவ்வாறு கையாண்டு தவெக அரசைக் காப்பாற்றப் போகிறார் என்பதே தற்போதைய மிகப்பெரிய கேள்விக்குறி என்று மூத்த பத்திரிகையாளர் தனது நேர்காணலை நிறைவு செய்தார்.